சுற்றுலாத் துறையின் பொங்கல் விழா: வேலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சுற்றுலாத் துறை சாா்பில் பொங்கல் விழா வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவை ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொங்கல் விழாவை தொடக்கி வைத்த ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொங்கல் விழாவை தொடக்கி வைத்த ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
Updated on
1 min read

சுற்றுலாத் துறை சாா்பில் பொங்கல் விழா வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவை ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தாா்.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை, வரும் 14-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சுற்றுலாத் துறை சாா்பில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை, பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது, பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞா்களின் மேளதாளத்துடன் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் மாட்டு வண்டியில் வந்து, குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியா்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், உதவி சுற்றுலா அலுவலா் இளமுருகன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com