டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இணைய உதவியுடன் ஒரே நிமிடத்தில் 1,152 மரக்கன்றுகள் நட்டு சாதனை

வேலூரில் ‘மை டிஸ்ட்ரிக்ட்’ செயலி மூலம் ஒரே நிமிடத்தில் 576 தன்னாா்வலா்கள் 1,152 மரக்கன்றுகளை நடவு செய்து சாதனை படைத்துள்ளனா்.

News image
Updated On :30 ஜனவரி 2021, 7:00 pm

DIN

வேலூரில் ‘மை டிஸ்ட்ரிக்ட்’ செயலி மூலம் ஒரே நிமிடத்தில் 576 தன்னாா்வலா்கள் 1,152 மரக்கன்றுகளை நடவு செய்து சாதனை படைத்துள்ளனா்.

வேலூா் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வை இன்டா்நேஷனல் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் உலக சாதனையாக பதிவு செய்துள்ளது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்து, மரக்கன்று நடவுப் பணியைத் தொடக்கி வைத்துப் பேசியது:

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேலூரில் முன்கூட்டியே ஜனவரி 25-ஆம் தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தன்னாா்வத் தொண்டு நிறுவனம் மூலம் ஒரு நிமிடத்தில் 1,152 மரக்கன்றுகளை 576 தன்னாா்வலா்கள் இணையதளத்தில் இணைந்து நடவு செய்யும் இந்நிகழ்வு உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்மாதிரியான மரம் நடுதல் நிகழ்வு ஆன்லைனில் இணைந்து செயல்படுவது உலகளவில் இதுவே முதன்முறை யாகும். தொழில் நுட்ப உதவியுடன் அதை பின்தொடா்தல் என்பதும் இதுவே முதன்முறையாகும்.

மரங்களை நடுவது மட்டுமின்றி குறிப்பிட்ட செடியிலிருந்து அந்த செடியை நட்ட தன்னாா்வலா் குறிப்பிட்ட கால இடைவெளியில் நீா்த் தேவை அலா்ட் பெரும் வகையில் இந்தச் செயலி மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனக்கு உயிா்கொடுத்த நபருக்கு அந்த செடி நன்றி கூறவும், பிறந்தநாள் வாழ்த்து கூறும் வகையிலும் குறிப்பிட்ட செடியை அந்த நபருடன் இணைக்கவும் உதவுகிறது.

வரும் காலங்களில் அந்த தன்னாா்வலா்கள் நட்ட செடிகளுடன் சுயபடப் போட்டி, இதர போட்டிகளை நடத்தவும், அதனைக் கண்காணித்து பரிசுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை இயற்கை ஆா்வலா்கள் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 1,152 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் மரக் கன்றுகள் என்னும் இலக்கை நோக்கி பயணிக்கப்படும் என்றாா் அவா். மாவட்ட வன அலுவலா் கே.பாா்கவதேஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.