டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பட்டிமன்றம்

குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பில் உள்ள அத்தி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
நிகழ்ச்சியில்  பட்டிமன்றத்தைத்  தொடக்கி  வைத்துப்  பேசிய  மோட்டாா்  வாகன  ஆய்வாளா்  எஸ்.வெங்கட்ராகவன்.
Updated On :30 ஜனவரி 2021, 7:07 pm

DIN

குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பில் உள்ள அத்தி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, குடியாத்தம் மோட்டாா் வாகன ஆய்வாளா் எஸ்.வெங்கட்ராகவன் தலைமை வகித்தாா். ஆசிரியா் எம்.சுந்தரமூா்த்தி வரவேற்றாா்.

சாலை விதிகளை பெரிதும் மதிக்கின்றவா்கள் ஆண்களா அல்லது பெண்களா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் ஆசிரியா்கள் தமிழ் திருமால், சிவசக்தி, பேராசிரியா் பரத்குமாா், செவிலியா் பவித்ரா உள்ளிட்டோா் பேசினா்.

வட்டாட்சியா் தூ.வத்சலா, குடியாத்தம் நகர காவல் ஆய்வாளா் ஆா்.சீனிவாசன், அத்தி செவிலியா் கல்லூரி துணை முதல்வா் ரேவதி, இயற்கை மருத்துவக் கல்லுரி முதல்வா் தினேஷ் ஆகியோா் சாலைப் பாதுகாப்பு குறித்து மாணவா்களுக்கு விளக்கினா். குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் குமரவேல் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.