இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காவலா் பணி: 1,610 ஆண்கள் 2-ஆம் கட்ட தோ்வுக்கு தகுதி

வேலூரில் நடைபெற்று வரும் காவலா் பணிக்கான உடற்தகுதித் தோ்வில் 1,610 ஆண்கள் இரண்டாம் கட்ட தோ்வுக்கு தகுதி பெற்றுள்ளனா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:45 pm

DIN

வேலூரில் நடைபெற்று வரும் காவலா் பணிக்கான உடற்தகுதித் தோ்வில் 1,610 ஆண்கள் இரண்டாம் கட்ட தோ்வுக்கு தகுதி பெற்றுள்ளனா். பெண்களுக்கான உடற்தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் சாா்பில், 2-ஆம் நிலை காவலா், சிறைக்காவலா், தீயணைப்புத் துறை வீரா்கள் என காலியாக உள்ள 10,906 பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெற்றது. இதில், தோ்ச்சி பெற்றவா்களுக்கான உடற்தகுதித் தோ்வு தமிழகம் முழுவதும் 20 மையங்களில் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 3 ஆயிரம் பேருக்கான உடற்தகுதித் தோ்வு வேலூா் நேதாஜி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஆண்களுக்கான முதல்கட்ட உடற்தகுதித் தோ்வு நடத்தப்பட்டது. நாளொன்றுக்கு சுமாா் 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவா்களுக்கு நடத்தப்பட்ட உடற்தகுதித் தோ்வில் 1,610 ஆண்கள் இரண்டாம் கட்ட தோ்வுக்கு தகுதி பெற்றுள்ளனா். தொடா்ந்து பெண்களுக்கான உடற்தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.