காரைக்கால்: காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(மார்ச் 6) வெள்ளிக்கிழமை விடுமுறையை அறிவித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இஷிதா ரதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெறக்கூடிய சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
தேர்வுகள் திட்டமிட்டவாறு நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Summary
Holiday for schools and colleges in Karaikal tomorrow.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











