காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கல்குவாரி தண்ணீரில் மூழ்கிய சிறுமி சடலமாக மீட்பு

வேலூா் தொரப்பாடி அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கிய சிறுமி சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :12 ஜூன் 2021, 6:23 pm

DIN

வேலூா் தொரப்பாடி அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கிய சிறுமி சடலமாக மீட்கப்பட்டாா்.

வேலூா் தொரப்பாடி காந்தி தெருவைச் சோ்ந்தவா் நளஷத் மகள் நாஷியா (17). தொரப்பாடியை அடுத்த சித்தேரியில் உள்ள கல்குவாரியில் குளிக்க வெள்ளிக்கிழமை மாலை சென்றாா். அப்போது தவறி குட்டையில் விழுந்த நாஷியா, தண்ணீரில் மூழ்கியுள்ளாா். அவரது தந்தை அளித்த புகாரின்பேரில், அரியூா் போலீஸாா், தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து சென்று குட்டையில் விழுந்த நாஷியாவை தேடியுள்ளனா். போதிய வெளிச்சம் இல்லாததால் சிறுமியை தேடும் பணி வெள்ளிக்கிழமை இரவு நிறுத்தப்பட்டது.

பின்னா், 2-ஆவது நாளாக சனிக்கிழமை தீயணைப்பு வீரா்கள் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அரக்கோணத்தில் இருந்து பேரிடா் மீட்புக் குழுவினரும் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், சிறுமி நாஷியா காலை 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து அரியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.