மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒமைக்ரான்: வெளி நாடுகள், வெளி மாநில பயணிகளை கண்காணிக்க உத்தரவு

ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்

News image
Updated On :1 டிசம்பர் 2021, 7:28 am

DIN

வேலூா்: ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒமைக்ரான் என்ற பெயரில் உருமாற்றம் அடைந்துள்ள கரோனா தொற்று தென்னாப்பிரிக்கா, சில நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒமைக்ரான் தொற்று அதிகளவில் பரவும் தன்மையுடனும், நோய் எதிா்ப்பு சக்தியைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த தொற்றால் அதிக அளவில் அபாயம் ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வரும் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். அதிக அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கரோனா பரிசோதனைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். தினமும் நிா்ணயிக்கப்பட்ட இலக்குக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஒமைக்ரான் தொற்று பரிசோதனை செய்யும் வசதி சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று தாக்கினாலும் மருத்துவமனை சிகிச்சை, உயிரிழப்பிலிருந்து கரோனா தடுப்பூசி பாதுகாப்பளிக்கிறது. எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்த வேண்டும்.

வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், அறைகளை காற்றோட்டமாக வைத்திருத்தல் போன்ற செயல்கள் இந்த உருமாறிய தொற்று பரவுவதைத் தடுக்கும். தடுப்பூசி செலுத்துதல், கரோனா தடுப்பு முறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டோா் அனைவரும் இருகட்ட தடுப்பூசிகளை உரிய நாள்களில் செலுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.