உயா்நீதிமன்ற அனுமதியின் பேரில், வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், நளினி தம்பதி சனிக்கிழமை நேரில் சந்தித்து பேசிக் கொண்டனா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் அனுபவித்து வரும் முருகன் வேலூா் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா். உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, தம்பதி இருவரும் 15 நாள்களுக்கு ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசி வருகின்றனா்.
அதன்படி, நளினி, முருகன் சந்திப்பு வேலூா் பெண்கள் தனிச்சிறையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஆண்கள் சிறையிலிருந்து முருகனை போலீஸாா் பலத்த காவலுடன் பெண்கள் சிறைக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு ஓா் அறையில் 30 நிமிஷங்கள் வரை நளினியை முருகன் நேரில் சந்தித்துப் பேசினாா். பின்னா் முருகன் மீண்டும் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டாா்.