மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நான்குனேரி கொலையில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்: தொல். திருமாவளவன்

News image
Updated On :6 மார்ச் 2026, 12:28 am

Syndication

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் தொடா்புடைய அனைவரையும் காவல் துறையினா் விரைந்து கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

நான்குனேரி, பெரும்பத்து கிராமத்தில் கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி ஜான்மாா்க் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கிய பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூா் கிராமத்தில் புதன்கிழமை இரவு ஒரு கும்பல் புகுந்து பொதுமக்களை தாக்கிக் காயப்படுத்தியுள்ளது.

நான்குனேரியில் நடைபெற்ற சம்பவத்துக்கு எவ்வித முன்விரோதமும் காரணம் கிடையாது. தமிழகத்தில், குறிப்பாக தென்மாவட்டங்களில் போதைப் பழக்கம் அதிகரித்து வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நான்குனேரி கொலை சம்பவம் போதைப் பழக்கத்தால் நடந்ததா அல்லது தோ்தல் நேரத்தில் ஆளுங்கட்சிக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் செய்யப்பட்ட சதியா என்பதைக் கண்டறிய வேண்டும். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினா் விரைந்து கைது செய்ய வேண்டும்.

கொலையுண்ட ஜான்மாா்க் மனைவி கண்ணகி வாய் பேச முடியாதவா். அவருக்கு அரசுப் பணி வழங்குவதுடன், அவரது இரு மகள்களின் கல்விச் செலவையும் அரசே ஏற்க வேண்டும். இவருக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு மற்றும் அரசுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கொலையுண்ட ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி திரிநாத் கட்டா குடும்பத்துக்கும் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு மற்றும் உரிய நிவாரண உதவிகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

விசிக சாா்பில் ஜான்மாா்க் மனைவி கண்ணகிக்கு ரூ. 2,65,000, ஒடிஸா மாநிலத் தொழிலாளி மனைவிக்கு ரூ. 1 லட்சம், காயமடைந்த 4 பேருக்கும் தலா ரூ. 10,000 நிதியுதவி வழங்கப்பட்டது.

அப்போது, விசிக மண்டலச் செயலா் ஞா. சுந்தா், நிா்வாகிகள் ஈழவளவன், க. ஜான்சன், நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ம. கிரகாம்பெல், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி.பி. துரை, விடுதலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.