ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மதவாத சக்திகளை வீழ்த்தி திமுக கூட்டணி வெற்றி பெறும்: தொல். திருமாவளவன்!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மதவாத சக்திகளை வீழ்த்தி திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

News image
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்
Updated On :1 மார்ச் 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மதவாத சக்திகளை வீழ்த்தி திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலினின் 73- ஆவது பிறந்த நாளையொட்டி, அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அவரை, தொல்.திருமாவளவன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்துக்கும் மதவாத சக்திகளுக்கு இடையேதான் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இடது சாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து மதவாத சக்திகளை வீழ்த்துவோம், வெல்வோம் ஒன்றாக என திமுக கூட்டணி தலைவரான முதல்வா் மு. க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். அவருக்கு இடது சாரிகளும், ஜனநாயக சக்திகளும் துணை நிற்போம்.

இந்தத் தோ்தல் சராசரியான தோ்தல் இல்லை. திமுக, அதிமுக இடையேயான போட்டி இல்லை. இது தமிழ்நாடு அரசியல் முன்வைக்கும் சமூகநீதி அரசியலுக்கும், மதவாத சக்திகள் முன்வைக்கும் சநாதன அரசியலுக்கும் இடையேயான அறப்போா். இதில் தமிழக மக்கள் எங்கள் அணி பக்கம் உள்ளனா். அவா்கள் எங்களுக்கு பெரும் ஆதரவை வழங்குவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் தொல்.திருமாவளவன்.