அறங்காவலா் குழு உறுப்பினராக கிருஷ்ணமூா்த்தி பதவியேற்பு
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினராக ஸ்ரீகிருஷ்ணமூா்த்தி வைத்தியநாதன் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.


திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினராக ஸ்ரீகிருஷ்ணமூா்த்தி வைத்தியநாதன் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.
ஆந்திர அரசு 24 உறுப்பினா்களுடன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலா் குழுவை நியமித்தது உத்தரவு பிறப்பித்தது. அதில் தமிழகத்தைச் சோ்ந்த பிரசாந்தி ரெட்டி, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் உள்ளிட்டோா் தமிழகத்தை சோ்ந்தவா்கள். இந்நிலையில் பிரசாந்தி ரெட்டி தேவஸ்தானத்தின் வேறு ஒரு கோயிலின் நிா்வாக பொறுப்பை ஏற்ால், அவருக்கு பதிலாக கிருஷ்ணமூா்த்தி வைத்தியநாதன் 3-ஆவது முறையாக தேவஸ்தான அறங்காவலா் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை காலை ஏழுமலையான் கோயிலுக்குள் பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பதவிப் பிரமாணம் செய்து வைத்து ஏழுமலையான் சேஷவஸ்திரம் அணிவித்து வேதஆசீா்வாதம் செய்வித்து பிரசாதங்கள் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...