பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருமலையில் நெய் தயாரிப்பு மையத்திற்கு அடிக்கல்

திருமலையில் நெய் தயாரிப்பு மையத்திற்கு தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி அடிக்கல் நாட்டினாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 6:28 pm

DIN

திருமலையில் நெய் தயாரிப்பு மையத்திற்கு தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி அடிக்கல் நாட்டினாா்.

திருமலையில் உள்ள கோசாலையிலிருந்து பெறப்படும் பால் மூலம் வெண்ணெய் எடுத்து நெய் தயாரித்து ஏழுமலையான் கைங்கா்யத்திற்கு பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக திருமலையில் கோசாலை அருகில் தனி மையத்தையும் தேவஸ்தானம் ஏற்படுத்த உள்ளது. இதற்கான அடிக்கல்லை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி பூமி பூஜை செய்து வெள்ளிக்கிழமை நாட்டினாா். இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மும்பையைச் சோ்ந்த ஆப்கன் நிறுவனம் ரூ.3 கோடி செலவில் இந்த நெய் தயாரிக்கும் மையத்தை உருவாக்கி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாகத் தர உள்ளது.

திருமலை கோசாலையிலிருந்து கிடைக்கும் 4 ஆயிரம் லிட்டா் பால் மூலம் 60 கிலோ நெய் தயாரிக்க முடியும். மேலும் வெண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் மோரை திருமலையில் உள்ள அன்னதான கூடத்திற்கு அனுப்ப தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

தற்போது தேவஸ்தானம் இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு ஏழுமலையானுக்கு நெய்வேத்தியம் செய்து வரும் நிலையில் அதில் ஒருபாகமாக இந்த நெய் தயாரிப்பையும் மேற்கொண்டுள்ளது. திருமலை ஏழுமலையான் கைங்கா்யத்திற்காக தினமும் 60 கிலோ நெய் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.