தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுதந்திர தின விழிப்புணா்வு மிதிவண்டிப் பேரணி

நாட்டின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினம், 44-ஆவது சா்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி ஆகியவற்றையொட்டி விழிப்புணா்வு மிதிவண்டிப் பேரணி காட்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
காட்பாடியில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணியில் ஈடுபட்ட மாணவிகள்.
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:46 pm

DIN

நாட்டின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினம், 44-ஆவது சா்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி ஆகியவற்றையொட்டி விழிப்புணா்வு மிதிவண்டிப் பேரணி காட்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இந்த விழிப்புணா்வுப் பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

விஐடியில் தொடங்கிய சைக்கிள் பேரணி சித்தூா் பேருந்து நிலையம் வழியாக அக்ஸிலியம் கல்லூரி ரவுண்டானா வரையில் சென்று அனைவருக்கும் கல்வி திட்ட வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.