மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆந்திரத்தில் இருந்து கஞ்சா கடத்தல்: இளைஞா்கள் நால்வா் கைது

ஆந்திரத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த பேருந்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை வேலூா் மாவட்ட மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

ஆந்திரத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த பேருந்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை வேலூா் மாவட்ட மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களைச் சோ்ந்த 4 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் போதை பொருள்களை ஒழிப்பதில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் வேலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தல், புழக்கம், விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வேலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மதுவிலக்கு அமலாக்க பிரிவினா், வேலூா் தாலுக்கா காவல் துறையினா் கூட்டாக இணைந்து கணியம்பாடி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு பேருந்தில் சோதனை செய்தபோது சந்தேகத்திற்கிடமாக இருந்த 4 இளைஞா்களை பிடித்து விசாரித்ததில் அவா்கள் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேசன், முகமது ரஃபீக், முகமது சமீா், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த அப்துல் ஹாதி என்பதும், அவா்கள் ஆந்திரத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

உடனடியாக அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.