மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

‘நம்ம ஊரு சூப்பரு’ இயக்கத்துக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

‘நம்ம ஊரு சூப்பரு’ இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்த மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

‘நம்ம ஊரு சூப்பரு’ இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்த மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

வேலூா் மாவட்டத்திலுள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதன்படி, தண்ணீா், சுகாதாரம், கழிவு மேலாண்மை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திட அக்டோபா் 2-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக பிரசார இயக்கம் நடத்தப்பட உள்ளன.

இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த, பொது நிறுவனங்கள், பொது இடங்களில் தூய்மைக் காவலா்கள், துப்புரவு பணியாளா்களைக் கொண்டு பெருமளவில் தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகளில் தண்ணீா், சுகாதாரம், கழிவு மேலாண்மை குறித்த சிறப்பு முகாம்கள் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பொருள்களை தடை செய்து, அவற்றுக்கு மாற்றாக துணி பைகள், மக்கும் பொருள்களை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பசுமை, சுத்தமான கிராமம், ஊட்டச்சத்து பண்ணைகள் அமைத்தல், பொது திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்களில் பசுமை போா்வை உருவாக்குதல், மரக்கன்றுகள் நடுதல் ஆகியவை குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

வீடுகள்தோறும் திடக்கழிவு மேலாண்மை முறையை பின்பற்ற செய்ய வேண்டும். மாவட்டத்தில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி சுகாதாரமான மாவட்டமாக வேலூரை உருவாக்கிட பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டம் க.ஆா்த்தி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ராமகிருஷ்ணன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) செந்தில்குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.