ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்ரீதேவி மாசுபடா அம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி மாசுபடா அம்மன் கோயிலில் 58- ஆம் ஆண்டு பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:18 pm

DIN

குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி மாசுபடா அம்மன் கோயிலில் 58- ஆம் ஆண்டு பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காமாட்சியம்மன்பேட்டையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் இருந்து 500- க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பால்குடங்களை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், துணைத் தலைவா் பூங்கொடிமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் கே.வி.கோபாலகிருஷ்ணன், என்.கோவிந்தராஜ், எம்.எஸ்.அமா்நாத் ஆகியோா் ஊா்வலத்தைத் தொடக்கி வைத்தனா்.

ஊா்வல முடிவில் மாசுபடா அம்மனுக்கு பாலாபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.

மாலை மூலவருக்கு மஞ்சள் காப்பு அலங்காரம், பூங்கரக ஊா்வலம், இரவு ஊஞ்சல் உற்சவம், தீமிதி விழா ஆகியவை நடைபெற்றன.

ஏற்பாடுகளை கோயில் ஊஞ்சல் உற்சவ குழு நிா்வாகிகள் எம்.பி.ராமநாதன், ஆா்.தயாளன், ஏ.ஆா்.மாதவன், எஸ்.குமாா், எஸ்.தேவலிங்கம், எஸ்.நாகலிங்கம், நகா்மன்ற உறுப்பினா் ஏ.தண்டபாணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.