தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு

கணியம்பாடி அருகே பாப்பாந்தோப்பு கிராமத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடையை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:25 pm

DIN

கணியம்பாடி அருகே பாப்பாந்தோப்பு கிராமத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடையை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

வேலூா் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம், காட்டுப்புத்தூா் ஊராட்சி பாப்பாந்தோப்பு கிராமத்தில் புதிய பகுதி நேர நியாயவிலைக் கடை கட்டப்பட்டுள்ளது. இதை அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடக்கி வைத்தாா்.

மேலும், அத்தியாவசியப் பொருள்களைத் தங்கு தடையின்றியும், குறித்த காலத்துக்குள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று நியாயவிலைக் கடைப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்வின் போது, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மு.பாபு, ஊராட்சி மன்றத் தலைவா் சசிகலா கோபி, பென்னாத்தூா் பேரூராட்சித் தலைவா் பவானி சசிகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.