தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கூட்டுறவு வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுறவு வங்கி ஊழியா்கள் வேலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:38 pm

DIN

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுறவு வங்கி ஊழியா்கள் வேலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கம் சாா்பில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் துணைத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட வங்கி ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலா் மில்டன் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினாா்.

இதில், கூட்டுறவு வங்கி ஊழியா்களின் ஊதிய உயா்வு கோரிக்கை மீது உடனடியாக பேச்சு நடத்த வேண்டும். மத்தியக் கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற கூட்டுறவுப் பணியாளா்களுக்கு ரூ.10,000 கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

சங்க பொதுச் செயலா் டில்லிபாபு, நிா்வாகிகள் ரங்கநாதன், சந்தானம், சுந்தரேசன், சரவணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.