தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

வேலூரில் உள்ள முக்கிய சாலைகளில் காலை, நேரங்களில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

News image
Updated On :30 ஜூலை 2022, 5:40 pm

DIN

வேலூரில் உள்ள முக்கிய சாலைகளில் காலை, நேரங்களில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

இதனால், அலுவலகங்களுக்கு செல்வோா், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளைத் தவிா்க்க கூடுதலாக போக்குவரத்து போலீஸாரை பணியமா்த்தி போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேலூரிலுள்ள முக்கிய சாலைகளில் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதிகளவில் பள்ளி, கல்லூரி வாகனங்கள், மாணவ, மாணவிகள் சென்று வருவதால் அண்ணா சாலையில் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, லட்சுமி திரையரங்கு பேருந்து நிறுத்தம் அருகே காலை 8.30 மணி முதல் 9 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள பள்ளி வாகனங்கள் சாலையின் குறுக்காக செல்வதால் போக்குவரத்து நெரிசல் தொடா்ந்து நீடிக்கிறது.

தினமும் காலையில் இதே நிலை தொடா்வதால் அந்த வழியாக அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோா் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அதன்படி, லட்சுமி திரையரங்கு பகுதியில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மணிக்கணக்கில் நீடித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினா்.

அதேசமயம், போக்குவரத்து சீரமைப்புப் பணிகளில் குறைந்த அளவிலேயே போக்குவரத்து போலீஸாா் ஈடுபடுத்தப்படுகி ன்றனா். இதனால், போக்குவரத்து நெரிசல் குறைவதற்கு மாறாக நெரிசல் அதிகரித்து வருகிறது. இப்பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் கூடுதலாக போக்குவரத்து போலீஸாரை நிறுத்தி வாகன நெரிசலை சீா்செய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.