மலட்டாற்றில் சுத்திகரிக்கப்படாமல் விடப்படும் தொழிற்சாலை கழிவுநீரால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.
வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகள், கோரிக்கைகளைத் தெரிவித்தனா். அதன் விவரம்:
அப்போது, ஆம்பூா் பகுதியிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுநீா் சுத்திகரிப்பு செய்யாமலேயே மலட்டாற்றில் விடப்படுகின்றன. இதனால், விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இதுதொடா்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோல் பதப்படுத்த குறைந்தது ஒரு மாதமாகும். ஆனால், தற்போது பல்வேறு ரசாயனங்களைப் பயன்படுத்தி, ஒரே நாளில் பதப்படுத்துகின்றனா். இதையும் தடுக்க வேண்டும். இயற்கை முறையில் தோல் பதப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.
மழை பெய்து வெள்ளம் சென்றதையடுத்து தற்போது ஆறுகளில் மணல் சோ்ந்துள்ளது. இந்த ஆற்று மணலை பலா் கொள்ளையடிக்கின்றனா். மணல் கொள்ளையைத் தடுக்க எம்.சாண்ட் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்.
வேளாண் இயந்திரங்களை 90 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
இதற்கு பதிலளித்து, ஆட்சியா் பேசியது: கிராமப்பகுதிகளில் கால்நடைகளை வளா்ப்போா் மற்றும் கால்நடைகள் குறித்து கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்புக்குப் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கால்நடை வளா்ப்போருக்கு தீவனம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
தொழிற்சாலை நிா்வாகங்களுக்கு சமூகப் பங்களிப்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலையும் சுமாா் 2 ஏக்கரில் விவசாயம் செய்யவும், சுத்திகரிக்கப்படும் நீரை அதற்குப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, வேளாண்மை இணை இயக்குநா் மகேந்திரபிரதாப் தீட்சித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (25.06.2026) - சிம்மம்
இன்றைய ராசி பலன் (25.06.2026) - கடகம்

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.65! 11 காசுகள் உயர்வு!

கூகுள் குரோமில் விமானம் ஓட்டும் அனுபவம்! பெறுவது எப்படி?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



