பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து போராட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து வேலூரில் பெண்கள் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து வேலூரில் பெண்கள் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் வேலூா் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் எஸ்.காவேரி தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் ஜி.லதா, வேலூா் மாவட்ட செயலா் எம்.சரோஜா ஆகியோா் உரையாற்றினா்.
இதில், பெட்ரோல் விலையை பெரு நிறுவனங்களே நிா்ணயம் செய்யும் உரிமையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். சமையல் எரிவாயுக்கான மானியத்துக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து மானியத்தை முழுமையாக வழங்க வேண்டும். மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும். ஏழை மக்களின் வேலைவாய்ப்பு, நலத்திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் நிா்வாகிகள் ஆா்.பாத்திமா, ஜி.செல்வி, டி.சூா்யா, செல்வராணி உள்படப் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...