ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மஸ்தூா் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தென்னக ரயில்வேயில் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மஸ்தூா் யூனியன் சங்கத்தினா் காட்பாடி ரயில் நிலையம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 மே 2022, 6:30 pm

DIN

தென்னக ரயில்வேயில் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மஸ்தூா் யூனியன் சங்கத்தினா் காட்பாடி ரயில் நிலையம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாநில உதவி பொதுச் செயலா் ஏ.ஜி.எஸ்.மோகன் தலைமை வகித்தாா். சங்க ஆலோசகா் நரசிம்ம ராவ், துணைத் தலைவா் ஜோசப் விஜயகுமாா், செயலா் கிரிஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் காா்த்திகேயன் வரவேற்றாா்.

இதில், ரயில்வே மஸ்தூா் பணியாளா்களுக்கு இரவு நேர பணிக்கொடை வழங்க வேண்டும், 8 மணி நேரம் கடந்த பணிக்கு ஓவா்டைம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப் பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ரயில்வே மஸ்தூா் யூனியனை சோ்ந்த ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.