
வெள்ளை மாளிகையில் மெஸ்ஸி..! இன்டர் மியாமி அணியினரைச் சந்தித்த டிரம்ப்!
எம்எல்எஸ் கோப்பை வென்ற இன்டர் மியாமி அணியை அமெரிக்க அதிபர் சந்தித்தது குறித்து...

இன்டர் மியாமி அணியினரைச் சந்தித்த டிரம்ப். - படம்: ஏபி
எம்எல்எஸ் கோப்பை வென்ற இன்டர் மியாமி அணியை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார்.
லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணி முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பையை கடந்த சீசனில் வென்றது.
அமெரிக்காவில் எம்எல்எஸ் கோப்பைக்கான கால்பந்துப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அமெரிக்காவில் இருந்து 27 அணிகளும் கனடாவில் இருந்து 3 அணிகளுமாக 30 அணிகள் பங்கேற்கின்றன.
கடந்த 2023 சீசன் பாதியில் இன்டர் மியாமியில் இணைந்த மெஸ்ஸி 2025 சீசனில் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இரண்டாவது முறையாக, மெஸ்ஸி தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மெஸ்ஸி எதுவும் பேசவில்லை. அதிபர் டிரம்ப், அரசியல் நிகழ்வுகள், ஈரான் போர், வெனிசுவேலா, கியூபா, வரி விதிப்புகள் குறித்து பேசினார்.
இந்தக் கொண்டாட்டத்தில் லியோனல் மெஸ்ஸி அதிபர் டிரம்ப்பிற்கு பிங்க் (இளஞ்சிவப்பு) நிற கால்பந்தினை பரிசாக அளித்தார்.
இளஞ்சிவப்பு நிறம் இன்டர் மியாமி அணியின் வண்ணமாக இருக்கிறது. மேலும், டிரம்ப்பிற்கு எண் 47 கொண்ட ஜெர்ஸியை பரிசாக அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மெஸ்ஸியைப் புகழ்ந்து பேசிய டிரம்ப் தனது மகனும் தீவிர ரசிகன் என்று இங்கு வர அடம்பிடித்ததாகவும் வேலை அதிகமாக இருப்பதால் வேண்டாம் என தான் மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
கடந்த 2025ல் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அளித்த விருது விழாவில் மெஸ்ஸி பங்கேற்க தவறியதும் குறிப்பிடத்தக்கது.
Summary
Lionel Messi bestowed President Donald Trump with a bejeweled pink soccer ball during a White House ceremony honouring Inter Miami for winning last year's MLS Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





