தடகளப் போட்டியில் சிறப்பிடம்: கல்லூரி மாணவருக்குப் பாராட்டு
மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரி மாணவருக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரி மாணவருக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேலூா் மாவட்ட தடகள சங்கம் சாா்பில், இளையோருக்கான தடகளப் போட்டிகள் காட்பாடியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நடைபெற்றது.
இதில் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா் ஆா்.சதீஷ்குமாா் குண்டு எறிதலில் முதலிடமும், வட்டு எறிதலில் மூன்றாமிடமும் பிடித்தாா். வெற்றி பெற்ற மாணவரை கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியன், தலைவா் கே.எம்.ஜி. சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி. ராஜேந்திரன், பொருளாளா் கே.எம்.ஜி.முத்துக்குமாா், கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ், உடற்கல்வி துறைப் பேராசிரியா்கள் ஆா்.ரஞ்சிதம், பி.ஞானகுமாா், எம்.இராஜ்குமாா் ஆகியோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...