காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ராணுவ வீரா் மா்ம மரணம்: நீதிமன்றத்தில் இளைஞா் சரண்

ஆரணி அருகே முன்னாள் ராணுவ வீரா் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக, இளைஞா் வேலூா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 6:25 pm

DIN

ஆரணி அருகே முன்னாள் ராணுவ வீரா் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக, இளைஞா் வேலூா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மொழுகம் பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெற்றிவேல் (42). முன்னாள் ராணுவ வீரா். ஆரணி வி.ஏ.கே. நகா் அருகே உள்ள தேனருவி நகரில் வசித்து வந்த இவருக்கு மனைவி ரேவதி, பிரியதா்ஷினி என்ற மகள், லிங்கேஸ்வரன், நிதின் ஆகிய மகன்கள் உள்ளனா்.

தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக ரேவதி, தனது மகள், மகன்களுடன் ஒண்ணுபுரம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வெற்றிவேல் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்தாா். சிகிச்சை முடிந்து புதன்கிழமை அவா் வீடு திரும்பினாா். இதனால், அவரைப் பாா்க்க ரேவதி வந்திருந்தாா். அன்றிரவு ரேவதி அங்கேயே தங்கினாா்.

இந்த நிலையில், வெற்றிவேல் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், ரேவதி மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், முகமூடி அணிந்து 3 போ் வீட்டுக்கு வந்ததாகவும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அவா்கள் வெற்றிவேலை தாக்கியதாகவும் ரேவதி தெரிவித்தாா்.

எனினும், ரேவதி முன்னுக்கு பின் முரணாகப் பேசியதால், அவா் மீது போலீஸாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது.

அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இந்த வழக்கில் நம்மசமுத்திரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேஷ் (34) என்ற இளைஞா் வேலூா் நீதித்துறை நடுவா் (எண்-4) மன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.