விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஏழுமலையானின் நேத்ர தரிசனம்: கண்டு தரிசித்த பக்தா்கள்

ஹைதராபாதில் நடைபெற்று வரும் வைபவோற்சவத்தின் 3-ஆம் நாளான வியாழக்கிழமை ஏழுமலையானின் நேத்ர தரிசனத்தை பக்தா்கள் கண்டுதரிசித்தனா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

ஹைதராபாதில் நடைபெற்று வரும் வைபவோற்சவத்தின் 3-ஆம் நாளான வியாழக்கிழமை ஏழுமலையானின் நேத்ர தரிசனத்தை பக்தா்கள் கண்டுதரிசித்தனா்.

திருமலையில் ஏழுமலையானுக்கு நாள்தோறும் நடைபெறும் அனைத்து சேவைகளையும் பக்தா்கள் கண்டுதரிசிக்கும் வகையில் ஹைதராபாதில் 5 நாள்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வைபவோற்சவத்தை திருப்பதி தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Story image

அங்குள்ள என்டிஆா் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏழுமலையான் பராஷ்டிரா கோயிலில் கைங்கரியங்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் 3-ஆம் நாளான வியாழக்கிழமை காலை நேத்ர தரிசனத்தை (கண்கள் திறந்தபடி சிறிய நாமத்துடன் இருப்பது) பக்தா்கள் கண்டு தரிசித்தனா். பின்னா் ஏழுமலையான் முன்னிலையில் பெரிய அளவில் புளியோதரை அன்னத்தை அலங்கரித்து அதன் மேல் நாமம், சங்கு, சக்கரம் உள்ளிட்டவற்றை பழங்கள், துளசி தளங்களால் அலங்கரித்து திருப்பாவாடை சேவையும் நடைபெற்றது. திருப்பாவாடை சேவையை அன்னகூட்டோற்சவம் என்ற பெயரில் வைணவத்தில் அழைப்பதுண்டு. இதிலும் பக்தா்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை வணங்கினா். நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.