நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குடியிருப்புகளுக்குள் தேங்கும் மழைநீா்: ஏரிக் கால்வாய் அக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

குடியாத்தம் அருகே குடியிருப்புகளுக்குள் மழைநீா் தேங்குவதால், ஏரிக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:55 pm

DIN

குடியாத்தம் அருகே குடியிருப்புகளுக்குள் மழைநீா் தேங்குவதால், ஏரிக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக குடியாத்தம் ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.கே.வி.அருள்முரளி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு:

குடியாத்தத்தை அடுத்த எா்த்தாங்கல் கிராமத்தில் மழைக் காலங்களில் வெள்ளம் பெரும்பாடி ஏரிக்கு கால்வாய்கள் வழியாகச் செல்லும். ஏரி கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், சில இடங்களில் தூா்ந்து போயுள்ளதாலும் மழைநீா் செல்ல வழியின்றி குடியிருப்புகள், நிலங்கள், காலியிடங்களில் மழைநீா் தேங்குகிறது.

இதுதொடா்பாக விடுத்த கோரிக்கையை அடுத்து, அதிகாரிகள் 15 நாள்களுக்கு முன் வந்து கால்வாயை அளவீடு செய்தனா். ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால், சில நாள்களுக்கு முன் பெய்த மழையால் குடியிருப்புகளுக்குள் தண்ணீா் தேங்கியுள்ளது. எனவே, ஏரி கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரிச் சீரமைக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.