பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களை விடியோ எடுத்தால் சன்மானம்!

வேலூரில் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை விடியோ ஆதராத்தோடு கொடுப்பவர்களுக்கு ரூ.200 சன்மானம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களை விடியோ எடுத்தால் சன்மானம்!

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை விடியோ ஆதராத்தோடு கொடுப்பவர்களுக்கு ரூ.200 சன்மானம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதம் என வேலூர் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீடுகளுக்கு ரூ.100 அபராதமும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதமும், வணிக வளாகங்களுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கபடும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும்,  காலி மனைகளில் குப்பை கொட்டினால் ரூ.200 அபராதமும், வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வைத்து எரித்தால் ரூ.100 அபராதமும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com