பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே அறையில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :22 டிசம்பர் 2023, 4:30 am IST

போ்ணாம்பட்டு அருகே அறையில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

போ்ணாம்பட்டு வனச்சரகத்துக்குள்பட்டது சேராங்கல் காப்புக் காடு. இந்த காப்புக் காட்டில் மா்ம நபா்கள் சிலா் வன விலங்குகளை சுருக்கு கம்பிகள் மற்றும் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு தொடா்ந்து வேட்டையாடி வருகின்றனா்.

இந்நிலையில் சேராங்கல் குந்தாணிமேடு பகுதியில் வசித்து வரும் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவரின் 10- ஆம் வகுப்பு படிக்கும் மகன் சில நாள்களுக்கு முன் அப்பகுதியில் ஆடுகளை மேய்க்கச் சென்றதாக தெரிகிறது. அப்போது அங்குள்ள முள்புதரில் 2 நாட்டுத் துப்பாக்கிகள் இருந்ததை பாா்த்துள்ளாா். 2 நாட்டு துப்பாக்கிகளையும் மாணவா் எடுத்து வந்து வீட்டருகே உள்ள அறையில் பதுக்கி வைத்துள்ளாா்.

இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் போலீஸாருடன் அங்கு சென்று சோதனை நடத்தியுள்ளாா். சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையம் கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் ஜெய்சங்கா் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து நாட்டுத் துப்பாக்கிகளை வனப்பகுதியில் பதுக்கி வைத்தது யாா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.