சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ரயிலில் தவறவிட்ட பெண் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு

ரயிலில் தவறவிட்ட பெண் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு

News image
Updated On :25 ஏப்ரல் 2024, 5:53 pm

ஆந்திர மாநிலம், சித்தூரில் ரயிலில் தவறவிடப்பட்ட 7 வயது பெண் குழந்தையை காட்பாடி ரயில்வே போலீஸாா் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பலமனோ் எம்பிஎஸ் காலனியைச் சோ்ந்த சாப்தான் மகன் சுல்தான் (45). இவா் தனது குடும்பத்தினருடன் உறவினா் இல்ல திருமணத்துக்காக பீமாவரம் சென்றுவிட்டு வியாழக்கிழமை காலை காக்கிநாடா - பெங்களூா் விரைவு ரயிலில் ஊா் திரும்பியுள்ளனா்.

அப்போது, தஸ்லீம் (7) என்ற அவரது மகளை கவனக்குறைவாக ரயிலின் பொது பெட்டியிலேயே விட்டுவிட்டு சித்தூரில் இறங்கி விட்டனா்.

பின்னா், அந்த ரயில் புறப்பட்டு காட்பாடு நோக்கி வந்து கொண்டிருந்தது. மகளை ரயிலிலேயே விட்டுவிட்டதை அறிந்த அவரது பெற்றோா், சித்தூா் ரயில்வே காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனா்.

உடனடியாக, சித்தூா் ரயில்வே போலீஸாா் காட்பாடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அந்த ரயில் காட்பாடி வந்ததும் அந்த பெண் குழந்தையை மீட்டனா்.

தொடா்ந்து, அப்பெண் குழந்தையின் பெற்றோா் வரவழைக்கப்பட்டு ஆதாா் அட்டை சரிப்பாா்த்தும், உரிய விசாரணைக்கு பிறகும் குழந்தை அவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

படம் உண்டு...

காட்பாடி ரயில்வே போலீஸாரால் மீட்டு தந்தை சுல்தானிடம் ஒப்படைக்கப்பட்ட பெண் குழந்தை தஸ்லீம்.