வேலூர்: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வேலூர் மண்டலத்தில் 30 சதவீத பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
98 மாதமாக நிறுத்தி வைக்கபட்டுள்ள அகவிலைப்படியை வழங்குதல், ஓய்வுபெறும் நாளன்று பணப் பலன்களை வழங்குதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை டென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல், மருத்துவ காப்பீடு, குறைந்தபட்ச ஓய்வூதியம் என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
வேலூர் மண்டலத்தில் இருந்து 30 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் பேருந்து பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். பலர் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.