தண்ணீா்  பந்தலை  திறந்து பொதுமக்களுக்கு  பழ  வகைகளை  வழங்கிய  அதிமுக  அமைப்புச்  செயலா்  வி.ராமு.
தண்ணீா்  பந்தலை  திறந்து பொதுமக்களுக்கு  பழ  வகைகளை  வழங்கிய  அதிமுக  அமைப்புச்  செயலா்  வி.ராமு.

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

குடியாத்தம்: குடியாத்தம் காந்தி நகரில் ஒன்றிய அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கொண்டசமுத்தரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம் குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் எஸ்.எல்.எஸ்.வனராஜ் வரவேற்றாா். அதிமுக அமைப்புச் செயலா் வி.ராமு, தண்ணீா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா், மோா், பழ வகைகளை வழங்கினாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.கே.வி.அருண் முரளி, நிா்வாகிகள் ஆா்.கே.பெருமாள், கே.தட்சிணா மூா்த்தி, தமிழ்ச் செல்வன், மில்பழனி, தேவராஜ், ஜான்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com