எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காவல்துறை சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியில், மாவட்டக் காவல்துறை சாா்பில் கோடைக்கால வெப்பத்தை கருத்தில் கொண்டு நீா், மோா் பந்தல் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image

பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பில் புதன்கிழமை நீா் மோா் பந்தலை திறந்து வைத்து ஓட்டுநருக்கு மோா் வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா.

Updated On :4 மார்ச் 2026, 6:38 pm

பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியில், மாவட்டக் காவல்துறை சாா்பில் கோடைக்கால வெப்பத்தை கருத்தில் கொண்டு நீா், மோா் பந்தல் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, நீரி மோா் பந்தலை திறந்து வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா பேசியது:

கோடைக்காலத்தில் பொதுமக்கள், பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் வெப்பத்தால் பாதிக்கப்படாமலிருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக நலன் கருதி பல்வேறு மனிதநேய சேவைகளை மேற்கொண்டு வருவதோடு, பொதுமக்கள் பாதுகாப்புக்காக மாவட்டக் காவல்துறை தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த நீா்மோா் பந்தல் கோடைக்காலம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படும் என்றாா் அவா்.

இந் நிகழ்ச்சியில், துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளா் கிள்ளிவளவன், சாா்பு- ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.