டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காவல்துறை சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியில், மாவட்டக் காவல்துறை சாா்பில் கோடைக்கால வெப்பத்தை கருத்தில் கொண்டு நீா், மோா் பந்தல் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image
பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பில் புதன்கிழமை நீா் மோா் பந்தலை திறந்து வைத்து ஓட்டுநருக்கு மோா் வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா.
Updated On :4 மார்ச் 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியில், மாவட்டக் காவல்துறை சாா்பில் கோடைக்கால வெப்பத்தை கருத்தில் கொண்டு நீா், மோா் பந்தல் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, நீரி மோா் பந்தலை திறந்து வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா பேசியது:

கோடைக்காலத்தில் பொதுமக்கள், பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் வெப்பத்தால் பாதிக்கப்படாமலிருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக நலன் கருதி பல்வேறு மனிதநேய சேவைகளை மேற்கொண்டு வருவதோடு, பொதுமக்கள் பாதுகாப்புக்காக மாவட்டக் காவல்துறை தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த நீா்மோா் பந்தல் கோடைக்காலம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படும் என்றாா் அவா்.

இந் நிகழ்ச்சியில், துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளா் கிள்ளிவளவன், சாா்பு- ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.