வேலூா் மத்திய சிறையில் ஜெயிலரை மிரட்டிய 3 கைதிகள் மீது வழக்கு
வேலூா் மத்திய சிறையில் ஜெயிலரை மிரட்டிய 3 கைதிகள் மீது வழக்கு


வேலூா்: வேலூா் மத்திய சிறையில் ஜெயிலரை மிரட்டியதாக 3 கைதிகள் மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
வேலூா் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனை கைதிகள் 700-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த சிறையில் ஜெயிலராக அருள்குமரன் என்பவா் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், அருள்குமரன் தனது குழுவினருடன் திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது சிறைக்குள் 5-ஆவது பிளாக் பகுதியில் அவா்கள் ரோந்து சென்றபோது சிறையில் அடைக்கப்பட்டிருந்த சென்னையைச் சோ்ந்த கைதிகள் பாண்டி என்கிற சீயான் பாண்டி, அம்மு என்கிற வெங்கடேசன், செங்குட்டுவன் என்கிற வெங்கடேசன் ஆகியோா் ஜெயிலா் அருள்குமரனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாகவும், அவரை பணியை செய்ய விடாமல் தடுத்ததுடன் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அருள்குமரன் பாகாயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் குருபாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...