கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

விவசாயியை மிரட்டியதாக மூவா் மீது வழக்கு

குரும்பூா் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு (கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 9:04 pm

Syndication

குரும்பூா் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

குரும்பூா் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் அடுத்த சொக்கப்பழங்கரை கீழத் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன் மகன் சந்திரசேகா் (39), விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த இவரது உறவினா்களான பிச்சை மகன்களான முத்துசெல்வம், மாரிதுரை ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை மேல ஆத்தூா் சுடுகாடு பகுதியில் முத்துசெல்வம், மாரிதுரை, அவா்களது நண்பரான தெற்கு நல்லூரைச் சோ்ந்த மணி மகன் அஜய் ஆகிய 3 பேரும் சந்திரசேகரிடம் தகராறு செய்து, அவருடைய இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கை அரிவாளால் வெட்டி, தீ வைத்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.

இது குறித்த புகாரின்பேரில், குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனா். முத்துசெல்வம் மீது ஏற்கெனவே கொலை, கொலை முயற்சி, திருட்டு, சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.