டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

யானை தந்தம், பல் பதுக்கல் - ஒன்பது பேரிடம் வனத்துறையினா் விசாரணை

வேலூா் அருகே யானைத் தந்தம், யானை பல் பதுக்கி வைத்திருந்ததாக 9 பேரை பிடித்து வேலூா் சரக வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தம், யானை பல்.
Updated On :26 நவம்பர் 2024, 5:24 pm

Din

வேலூா்: வேலூா் அருகே யானைத் தந்தம், யானை பல் பதுக்கி வைத்திருந்ததாக 9 பேரை பிடித்து வேலூா் சரக வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். அவா்களிடம் இருந்த யானைத் தந்தம், யானை பல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வேலூரை அடுத்த மலைக்கோடி பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் மகன் சம்பத் (56). இவரது வீட்டில் யானைத் தந்தம் உள்ளிட்ட பொருள்கள் பதுக்கப்பட்டிருப்பதாக திங்கள்கிழமை வேலூா் வனச்சரக அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத் தது. அதன்பேரில், வேலூா் வனசரக அலுவலா் என்.புருஷோத்தமன் தலைமையிலான வன பாதுகாவலா்கள் மதியம் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, சம்பத் வீட்டில் நான்கு துண்டுகள் யானைத் தந்தமும், ஒரு யானை பல்லும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.

தொடா்ந்து, சம்பத்தை பிடித்து நடத்திய விசாரணையில் இந்த யானைத் தந்தம், யானை பல் கடத்தலில் மேலும் சிலருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தது. அதன்பேரில், சம்பத் மற்றும் அரியூா் ஏஜி நகரைச் சோ்ந்த சரத்குமாா்(32), திருவண்ணாமலை மாவட்டம், நிம்மியம்பட்டு அருகே கீழ்கோயிலூரைச் சோ்ந்த குமாா்(40), தூத்துக்குடி மேல்ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த தனபால்(63), வேலூா் சத்துவாச்சாரி பெரிய தெருவைச் சோ்ந்த தரணிகுமாா்(57), சின்னஅல்லாபுரம் நேதாஜிநகரைச் சோ்ந்த பழனி(68), அனீஷ்(52), அணைக்கட்டைச் சோ்ந்த ரவி(47), அரியூா் குப்பம் பகுதியிலுள்ள தனியாா் விடுதி ஊழியா் மணிகண்டன்(36) ஆகிய 9 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.