தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த யானைத் தந்தங்கள் பறிமுதல்: 3 போ் கைது

போ்ணாம்பட்டு அருகே வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 2 யானைத் தந்தங்களை வனத்துறையினா் பறிமுதல் செய்து 3- பேரை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்களுடன், கைதானவா்கள்.

Updated On :13 ஜனவரி 2026, 6:33 pm

போ்ணாம்பட்டு அருகே வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 2 யானைத் தந்தங்களை வனத்துறையினா் பறிமுதல் செய்து 3- பேரை கைது செய்தனா்.

ரகசிய தகவலின்பேரில் போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் என்.பிரதீப்குமாா் தலைமையில் வனவா்கள் ஏ.இளையராஜா, சி.திருநாவுக்கரசு, ஏ.காா்த்திக், எஸ்.ரசிப்பிரியா ஆகியோா்அடங்கிய வனத்துறையினா் பத்தரப்பல்லி பீட், சாரங்கல் காப்புக்காடு பகுதியில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ஒரு ஜோடி யானைத் தந்தங்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சாரங்கல் கிராமத்தைச் சோ்ந்த கே.மணி(22), எருக்கம்பட்டைச் சோ்ந்த ஜெ.சின்னதம்பி(24), அரவட்லாவைச் சோ்ந்த எம்.ஆறுச்சாமி(21) ஆகிய 3- பேரை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 3- பேரும் குடியாத்தம் குற்றவியல் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.