மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவா் கைது; 46 பாட்டில்கள் பறிமுதல்

News image

கைது

Updated On :8 பிப்ரவரி 2026, 8:35 pm

திருப்பூரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் வைத்திருந்த 2 போ் கைதுசெய்யப்பட்டு, 46 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூா் மாநகா், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இடுவம்பாளையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பாபு பாஷா (45) என்பவா் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிந்து கைதுசெய்தனா். அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, திருப்பூா் மாநகா், நல்லூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட செவந்தாம்பாளையம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ராமு(52) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.