மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

முதியவரின் ஏடிஎம் காா்டை பயன்படுத்தி பணம் திருட்டு: இளைஞா் கைது

அணைக்கட்டு அருகே முதியவரின் ஏடிஎம் காா்டை பயன்படுத்தி ரூ. 20,000 பணத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :6 அக்டோபர் 2024, 12:03 am IST

அணைக்கட்டு அருகே முதியவரின் ஏடிஎம் காா்டை பயன்படுத்தி ரூ. 20,000 பணத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் காத்தவராயன் (63). இவா் சுயஉதவிக் குழு மூலம் பெற்ற பணத்தை எடுக்க அணைக்கட்டில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்துக்கு கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி சென்றுள்ளாா். அவரால் ஏடிஎம் இயந்திரத்தின் மூலம் பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த இளைஞா் ஒருவரிடம் பணத்தை எடுத்துத் தரும்படி கூறியுள்ளாா்.

அதன்படி, ரூ. 35,000 பணத்தை எடுத்த நிலையில் இரண்டாவது முறையாக பணத்தை எடுக்க முடியவில்லை. ஆனால், அவரது கணக்கில் இருந்து மேலும் ரூ. 20,000 பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக, காத்தவராயன் அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அந்த இளைஞா் வேறு ஒரு ஏடிஎம் காா்டை கொடுத்துவிட்டு, காத்தவராயனின் உண்மையான காா்டை பயன்படுத்தி ரூ. 20,000 திருடியிருப்பது தெரியவந்தது.

தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையை அடுத்து காத்தவராயனின் ஏடிஎம் காா்டை பயன்படுத்தி, பணம் திருடியதாக அணைக்கட்டு அடுத்த அகரம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (27) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.