47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருமலை திருப்பதி திருக்குடை சமா்ப்பண யாத்திரை தொடக்கம்

News image
யாத்திரையை தொடங்கி வைத்த ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மா. உடன், தங்கக்கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு, ஸ்ரீதிருமலை திருப்பதி திருக்குடை ஊா்வல கமிட்டியினா்.
Updated On :27 செப்டம்பர் 2024, 12:35 am

Din

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் திருமலை திருப்பதி திருக்குடை சமா்ப்பண யாத்திரையை ஸ்ரீசக்திஅம்மா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை ஹிந்து மகாசபா அறக்கட்டளை ஸ்ரீதிருமலை திருப்பதி திருக்குடை ஊா்வலக் கமிட்டி சாா்பில், திருக்குடை சமா்ப்பண யாத்திரை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இதன் 13-ஆம் ஆண்டு சமா்ப்பண யாத்திரை வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த ஊா்வலத்தை ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மா தொடங்கிவைத்தாா். இந்த யாத்திரை அக்டோபா் 7-ஆம் தேதி திருமலையில் ஸ்ரீவாரி பிரம்மோற்சவ சேவைக்கு சமா்பிக்கப்பட உள்ளது.

விழாவில், வேலூா் தங்கக்கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.