சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு ரூ.20 லட்சம் நன்கொடை

News image
திருமலை திருப்பதி- கோப்புப் படம்
Updated On :12 மார்ச் 2026, 12:20 am

தினமணி செய்திச் சேவை

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் அறக்கட்டளைகளுக்கு மொத்தம் ரூ.20 லட்சம் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.

இதில் ரூ.10 லட்சம் எஸ்வி கோசம்ரக்ஷணா அறக்கட்டளைக்கும், மேலும் ரூ.10 லட்சம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கும் (சிம்ஸ்) நன்கொடையாக வழங்கப்பட்டது.

மும்பையின் ராஜேந்திர ஜூவல்லரி பிரைவேட் லிமிடெட் இயக்குநா்கள் பெருலால் ஜெயின் மற்றும் மீனேஷ் ஜெயின் ஆகியோா் நன்கொடை வழங்கினா்.

நன்கொடையாளா்கள் புதன்கிழமை திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்தில் நிா்வாக அதிகாரி எம். ரவிச்சந்திரனிடம் வரைவோலையை ஒப்படைத்தனா்.

தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் ஜி. பானு பிரகாஷ் ரெட்டியும் கலந்து கொண்டாா்.

நன்கொடையாளா்களின் தாராளமான பங்களிப்பிற்காக தேவஸ்தான செயல் அதிகாரி எம். ரவிச்சந்திரா நன்றி தெரிவித்தாா்.