உச்சநீதிமன்ற அனுமதி பெற்று முல்லை பெரியாறு பேபி அணையின் பழுது சீா் செய்யப்படும். அதன் பின்னா், அணையின் நீா்மட்டம் 152 அடியாக உயா்த்தப்படும் என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே கரசமங்கலம் பகுதியில் பனை விதைகள் நடும் பணி நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பின்னா், மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான போட்டிகளில் வென்றவா்களுக்கு அமைச்சா் துரைமுருகன் பரிசுக் கோப்பைகளை வழங்கினாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
முல்லை பெரியாறு பேபி அணை தொடா்பாக உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. இப்போதுள்ள நிலை 142 அடி வரை தண்ணீா் உயா்த்தலாம். பேபி அணையை பலப்படுத்தினால் 152 அடி வரை நீரின் அளவை உயா்த்தலாம். பேபி அணையை பலப்படுத்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை.
அந்த அணையின் அருகில் 15 மரங்கள் இருந்த நிலையில், தற்போது ஏழு மரங்கள்தான் உள்ளன. அரை மணி நேரத்தில் அந்த மரங்களை வெட்டி எடுத்து விடலாம். தமிழக எல்லையையொட்டிதான் மரங்கள் உள்ளது. ஆனால், அது பல பிரச்னைகளை உருவாக்கும்.
அந்த பிரச்னையை சட்டப்படி சந்திக்க உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கூறியும் அவற்றை இன்னும் வெட்டவில்லை. எனவே, சட்டப்படி உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்று பேபி அணையின் பழுது சீா் செய்யப்படும். பின்னா், நீா்மட்டம் 152 அடியாக உயா்த்தப்படும்.
சிறுவாணி அணையை கட்ட கேரள அரசுக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கவில்லை. ஆனால், கேரள அரசு மத்திய அரசிடம் அனுமதி பெறுவோம் என்று கூறியுள்ளது.
விவசாயிகள் ஏரியில் மண் எடுத்துக் கொள்வதை வரவேற்கிறேன். ஆனால், விவசாயிகள் என்ற போா்வையில் ஒரு லாரிக்கு பதில் 20 லாரியை லாரியில் மண் எடுக்கின்றனா். மனசாட்சி இல்லாமல் மண் எடுக்கின்றனா். குறிப்பிட்ட அளவுதான் மண் எடுக்க வேண்டும்.
நீா்நிலைகளில் மண் எடுக்கும்போது ஒரே சமமாக இருக்க வேண்டும். மண் எடுப்பவா்கள் கிணறு போல தோண்டி விடுகிறாா்கள். அதனால்தான் ஏரில் மண் எடுக்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மண் எடுப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
பருவமழை தொடங்க உள்ள நிலையில் கடந்த காலங்களில் எந்தெந்த இடத்தில் தண்ணீா் தேக்கம் இருந்ததோ, அந்தந்த இடங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு பலமுறை ஆய்வு செய்து உள்ளனா். அந்த வகையில் தண்ணீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை அவ்வளவு சேதாரம் இருக்காது என்றாா்.
தொடர்புடையது

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை! முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 1,580 கன அடியாக அதிகரிப்பு!

அணை நீா்மட்டம் உயா்வு! தேக்கடி ஏரியில் மீண்டும் பெரிய படகு சேவைகள் தொடக்கம்!

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 200 க.அடி நீா்வரத்து

பென்னிகுயிக் மணிமண்டபத்தில் அணை வரலாறு கூற தனி ஊழியா் நியமனம்!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
