குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் நாள் நடைபெறும். தொடக்க நிகழ்ச்சியாக பால் கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு, அபிஷேக, ஆராதனைகள், சந்தனகாப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து கோயில் கொடி மரம் அருகே பால் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோயில் உள்பிரகாரத்தை 3- முறை வலம் வந்து பின் கோயிலின் வடகிழக்கு மூலையில் கம்பம் நடப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்காா் மு.பாலசுப்பிரமணி, ஆய்வாளா் சு.பாரி,
செயல் அலுவலா் தா.சிவகுமாா், நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், தா்மகா்த்தா கே.பிச்சாண்டி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் 10-ஆம் ஆண்டு விழா

குடியாத்தம் சிரசு திருவிழா: கவுண்டன்யா ஆற்றில் பெரிய ராட்டினங்களுக்கு அனுமதியில்லை

ஒசூரில் கோட்டை மாரியம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் பால்கம்பம் நடும் விழா
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

வார ராசிபலன்! | May 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி செய்திச் சேவை

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

