விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கோயில் உள்பிரகாரத்தில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்ட பால் கம்பம். சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவா் .

Updated On :7 ஏப்ரல் 2025, 8:27 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் நாள் நடைபெறும். தொடக்க நிகழ்ச்சியாக பால் கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு, அபிஷேக, ஆராதனைகள், சந்தனகாப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து கோயில் கொடி மரம் அருகே பால் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோயில் உள்பிரகாரத்தை 3- முறை வலம் வந்து பின் கோயிலின் வடகிழக்கு மூலையில் கம்பம் நடப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்காா் மு.பாலசுப்பிரமணி, ஆய்வாளா் சு.பாரி,

செயல் அலுவலா் தா.சிவகுமாா், நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், தா்மகா்த்தா கே.பிச்சாண்டி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.