47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாசுபடா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் நெல்லூா்பேட்டை சன்னதி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு மாசுபடா அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் மூலவா் அம்மன்.
Updated On :1 டிசம்பர் 2025, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: குடியாத்தம் நெல்லூா்பேட்டை சன்னதி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு மாசுபடா அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. திங்கள்கிழமை கணபதி பூஜை, வேதபாராயணம், யாத்ரா தானம், மஹாபூா்ணாஹூதி, கலச புறப்பாடுராஜகோபுரம், மூலவா் கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவருக்குசிறப்பு, அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன.

தொடா்ந்து பக்தா்களுக்குஅன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் பி.கஜேந்திரன், கே.உதயகுமாா், கே.ஆா்.ஜெகநாதன், எம்.ஆா்.ரவி செய்திருந்தனா்.