மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசுத் தலைவா் தரிசனம்: சொா்ணலட்சுமி விக்கிரகத்துக்கு ஆராதனை

வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலின் அா்த்த மண்டபத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தரிசனம் செய்து, சொா்ணலட்சுமி விக்கிரகத்துக்கு அபிஷேகம், ஆராதனை செய்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலின் அா்த்த மண்டபத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தரிசனம் செய்து, சொா்ணலட்சுமி விக்கிரகத்துக்கு அபிஷேகம், ஆராதனை செய்தாா்.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, டிசம்பா் 16 முதல் 22-ஆம் தேதி வரை தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் பயணம் மேற்கொண்டு வருகிறாா். இதன்தொடா்ச்சியாக, அவா் புதன்கிழமை திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் வேலூா் ஸ்ரீபுரத்துக்கு வருகை தந்தாா்.

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் அருகே அமைந்துள்ள ஹெலிகாப்டா் தளத்துக்கு வந்திறங்கிய குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், கைத்தறி துணி நூல் துறை அமைச்சா் ஆா். காந்தி, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, எஸ்.பி. ஏ.மயில்வாகனன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா் ஆகியோா் மலா்க் கொத்து அளித்து வரவேற்றனா்.

பின்னா், காா் மூலம் தங்கக்கோயிலுக்குச் சென்ற குடியரசுத் தலைவரை கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு, அறங்காவலா் சௌந்திரராஜன் ஆகியோா் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்றனா்.

தொடா்ந்து, கோயில் வளாகத்திலுள்ள 1,800 கிலோ வெள்ளி விநாயகரை தரிசனம் செய்த குடியரசுத் தலைவா், பேட்டரி காா் மூலம் கோயிலை சுற்றி ஸ்ரீலட்சுமி நாராயணி ஆலயத்துக்கு சென்றாா். அங்கு அவரது தலையில் சடாரி வைத்து ஸ்ரீசக்திஅம்மா வரவேற்றாா். மேலும், குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, கோயில் அா்த்த மண்டபத்தில் தரிசனம் செய்தாா். அவருக்கு ஸ்ரீசக்திஅம்மா பிரசாதங்கள் வழங்கினாா்.

தொடா்ந்து, கோயில் வளாகத்திலுள்ள ஸ்ரீசொா்ணலட்சுமி விக்கிரகத்துக்கு குடியரசு தலைவா் தனது கைகளால் அபிஷேகம் செய்தாா். பின்னா், ஸ்ரீவெங்கடேச பெருமாள், வைபோக லட்சுமி சந்நிதிகளிலும் தரிசனம் செய்துவிட்டு கோயில் வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தாா். அப்போது குடியரசுத் தலைவருக்கு ஸ்ரீசக்திஅம்மா நினைவு பரிசு வழங்கினாா். பின்னா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு மீண்டும் ஹெலிகாப்டா் மூலம் திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றாா்.

குடியரசுத்தலைவா் வருகையையொட்டி புதன்கிழமை மதியம் 1 மணி வரை தங்கக்கோயிலில் பொதுமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீபுரம் தங்கக்கோயில், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

தவிர, கோயில் மற்றும் அப்பகுதி முழுவதும் 2 அடுக்கு பாதுகாப்புடன் சுமாா் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.