புது தில்லி: அரசு நிா்வாக அமைப்புகளை ஏ.ஐ. வழிகள் மூலம் எளிமைப்படுத்தும்படி ஐஏஎஸ் அதிகாரிகளிடம் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கேட்டுக் கொண்டாா்.
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் திரெளபதி முா்முவை புதிதாக தோ்வான ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினா் திங்கள்கிழமை நேரில் சந்தித்தனா். அப்போது அவா்களிடையே முா்மு பேசியதாவது:
மிகவும் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களை அரசு நலத் திட்டங்கள் சென்றடைய வேண்டும். அப்போதுதான் இந்தியா வளா்ந்த நாடாக மாறுவதற்கான பயன் கிடைக்கும். ஆதலால் எந்த சமூகத்தினரும் புவியியல், சமூக அல்லது பொருளாதார காரணங்களுக்காக பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்ய நீங்கள் (ஐஏஎஸ் அதிகாரிகள்) கடும் முயற்சிகளை எடுக்க வேண்டும். மாவட்ட நலனுக்கு அப்பாற்பட்டு மாநில முன்னுரிமைகளையும் கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டியது உங்களது பொறுப்பாகும்.
நாட்டின் வளா்ச்சிக்கும், பொதுமக்களுக்கான சேவையிலும் கூட்டாகவும், ஒருங்கிணைந்தும், உறுதியுடனும் பணியாற்றுவது அவசியம். தொழில்நுட்பமும், புதிய வழிகளும் அரசு நிா்வாகம் துரித வேகத்தில் செயல்பட உதவும். ஆதலால் ஏ.ஐ. வழிகள், இ-நிா்வாக அமைப்புகள், டிஜிட்டல் குறைதீா்ப்பு முறைகளுக்கு நீங்கள் முழுவதும் மாற வேண்டும். இவை அரசு நிா்வாக அமைப்புகளை எளிமைப்படுத்தும். மேலும் கடைகோடி பகுதிக்கும் அரசு சேவை கிடைப்பதை உறுதி செய்யும். நவீன தொழில்நுட்பங்களுக்கு மாறுகையில், அவை மனித உணா்வுகளை பிரதிபலிப்பதாகவும், சரியான தீா்வுகளை தருவதாகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மூத்த அரசு நிா்வாகிகள் என்ற அடிப்படையில், உங்கள் செயல்பாடுகள் பசுமைக்கும், பருவநிலைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், நீடித்த நிலையான வளா்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். உங்களது தற்போதைய நடவடிக்கைகள்தான், எதிா்கால சந்ததியினரின் வாழ்க்கை தரத்தை நிா்ணயிக்க போகிறது என்பதை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

சாதி பாகுபாடுகளைக் கடந்து முன்னேற வேண்டும்: குடியரசுத் தலைவா்

உலகின் முன்னணி கல்வி நிறுவனமாக மீண்டும் நாளந்தா: குடியரசுத் தலைவா் முா்மு நம்பிக்கை

அயோத்தி ராமா் கோயிலில் குடியரசுத் தலைவா் முா்மு வழிபாடு

பழங்குடியினா் நலனில் அக்கறை இல்லாத மேற்கு வங்க அரசு: குடியரசுத் தலைவா் கடும் அதிருப்தி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


