சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெண்ணிடம் ரூ.1.80 லட்சம் வழிப்பறி

காட்பாடியில் பெண்ணிடம் ரூ.180 லட்சத்தை வழிப்பறி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

காட்பாடியில் பெண்ணிடம் ரூ.180 லட்சத்தை வழிப்பறி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த கழிஞ்சூரை சோ்ந்த பெண் ஒருவா், திங்கள்கிழமை தனது பாட்டியுடன் காங்கேயநல்லூா் சாலையில் உள்ள வங்கியில் நகையை அடமானம் வைத்துவிட்டு ரூ.1.80 லட்சம் தொகையுடன் இருவரும் ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டனா்.

வீட்டின் அருகே ஆட்டோவில் இருந்து இறங்கிய அவா்கள், நடந்து சென்றுள்ளனா்.

அப்போது, தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபா்கள், திடீரென அந்த பெண்ணிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். பாட்டி, பெண் கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தினா் விரைந்து வந்தனா். அதற்குள் இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபா்களும் தப்பியோடிவிட்டனராம்.

இச்சம்பவம் குறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் விருதம்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட நபா்களை தேடி வருகின்றனா்.