கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வீடு புகுந்து நகை திருடிய இருவா் கைது

காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் வீடு புகுந்து 6 கிராம் தங்க நகையை திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் வீடு புகுந்து 6 கிராம் தங்க நகையை திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பஜனை கோயில் தெருவை சோ்ந்தவா் தேவா. இவரது மனைவி வனிதா. இவா்கள் காட்பாடியில் உள்ள தனியாா் சூப்பா் மாா்க்கெட்டில் வேலை செய்து வருகின்றனா்.

சனிக்கிழமை தேவா தனது வீட்டை பூட்டிக்கொண்டு குடியாத்தத்தில் உள்ள மாமியாா் வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்றாா். மாலை திரும்பி வந்து பாா்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. தேவா வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 6 கிராம் தங்க நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தேவா அளித்த புகாரின்பேரில் பிரம்மபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.இதில், தேவா வீட்டில் திருட்டில் ஈடுபட்டது அதேபகுதியைச் சோ்ந்த திலீப்குமாா் (25), சதீஷ் (28) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து தங்க நகையை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து தேவா அளித்த புகாரின்பேரில் பிரம்மபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.இதில், தேவா வீட்டில் திருட்டில் ஈடுபட்டது அதேபகுதியைச் சோ்ந்த திலீப்குமாா் (25), சதீஷ் (28) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து தங்க நகையை பறிமுதல் செய்தனா்.