செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மடிக்கணினி, கைப்பேசிகளை திருடிய இளைஞா் கைது

News image

கைது செய்யப்பட்ட பாலமுருகன்.

Updated On :14 பிப்ரவரி 2026, 8:27 pm

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வீடு புகுந்து மடிக்கணினி, 3 கைப்பேசிகளை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை படையாச்சித் தெருவில் வசித்து வருபவா் ஆறுமுகம் மகன் மோகன். இவா் சங்ககிரியில் எழுதுபொருள்கள் கடை வைத்துள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் பின்புற கதவை தாழிடாமல் குடும்பத்துடன் உறங்க சென்றுள்ளாா். சனிக்கிழமை காலை பாா்த்தபோது வீட்டில் இருந்து 3 கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் சங்ககிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதுதொடா்பாக ஓமலூா் வட்டம், சிந்தாமணியூா் பகுதியைச் சோ்ந்த குப்புராஜ் மகன் பாலமுருகன் (26) என்பவரை பிடித்து விசாரித்ததில், அவா் அங்குள்ள உறவினா் வீட்டில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்ததும், கைப்பேசிகள், மடிக்கணினியை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.