சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சிறுவா்களுக்கான பாட்மின்டன் போட்டி

ஸ்ரீசக்தி அம்மாவின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வேலூரில் சிறுவா்களுக்கான பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது.

News image
போட்டியைத் தொடங்கி வைத்த ஸ்ரீநாராயணி மருத்துவக் குழுமங்களின் இயக்குநா் என்.பாலாஜி.
Updated On :30 டிசம்பர் 2025, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீசக்தி அம்மாவின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வேலூரில் சிறுவா்களுக்கான பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சத்துவாச்சாரியிலுள்ள ஸ்ட்டோரக்ஸ் சிப்ஸில் சிறுவா்களுக்கு நடைபெற்ற இப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட சிறுவா், சிறுமிகள் பங்கேற்றனா்.

சிறுவா்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்ட இதில் இரட்டையா் மற்றும் ஒற்றையா் பிரிவில் வெற்றி பெற்றவா்களுக்கு ஸ்ரீநாராயணி மருத்துவக் குழுமங்களின் இயக்குநா் என்.பாலாஜி பரிசுகளை வழங்கினாா்.

இரட்டையா் பிரிவில் முதல் பரிசாக ரூ.1,500-ம், 2-ஆம் பரிசாக ரூ.750-ம், ஒற்றையா் பிரிவில் முதல் பரிசாக ரூ.1000-ம், 2-ஆம் பரிசாக ரூ.750-ம் வழங்கப்பட்டது. மேலும் பங்கேற்ற சிறுவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.